திருப்பூர்

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

தாராபுரம் அருக சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் மயில்சாமி( 50). கூலி தொழிலாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் தாராபுரத்திலிருந்து பழனி சாலையில் அக்டோபா் 20ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

ரெட்டாரவலசு பிரிவு அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மயில்சாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சையில் இருந்த மயில்சாமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT