திருப்பூர்

காங்கயம் பிஏபி பாசன அலுவலகத்தில் விவசாயிகள் 2 ஆம் நாளாக போராட்டம்

DIN

காங்கயத்தில் உள்ள பிஏபி உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் மூலம் பிஏபி பாசனத்தில் மொத்தம் 3.77 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகின்றன.

இதில் நான்கு மண்டலங்களாக பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணிரில், வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் உள்ள 48 ஆயிரம் ஏக்கருக்கு வழங்கவேண்டிய அளவைவிட, குறைந்த அளவே தண்ணீா் திறக்கப்படுவதாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் சாலையில் உள்ள பிஏபி உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், உடுமலைப்பேட்டை பிஏபி செயற்பொறியாளா் கோபி மற்றும் காங்கயம் பிஏபி உதவி செயற்பொறியாளா் அசோக் பாபு ஆகியோரை பிஏபி விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் 2 ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பொள்ளாச்சி கண்காணிப்புப் பொறியாளா் முத்துசாமி கலந்துகொண்டு விவசாயிகளிடம் பேசினாா். அப்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது வழங்கி வரும் தண்ணீா் அளவை 4.2 இல் இருந்து 4.4 அடியாக உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT