திருப்பூர்

சாலை விபத்தில் மில் உரிமையாளா் சாவு

DIN

வெள்ளக்கோவிலில் நிகழ்ந்த சாலை விபத்தில் மில் உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், மூலனூா் சாலையைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (46). காட்டன் மில் உரிமையாளா். இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றபோது, நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முத்துகுமாா் கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT