கோப்புப்படம் 
திருப்பூர்

திருப்பூர்: நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்வு

பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

DIN

திருப்பூர்: பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கிடையே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. அதிலும் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது பின்னலாடை உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது. 

அதிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்ததிருந்தது. இந்த நிலையில், 2022  ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் மூன்று மாதங்களில் கிலோவுக்கு ரூ 50 வரை உயர்ந்திருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும்  கிலோவுக்கு ரூ.30 வரையில் உயர்த்தியுள்ளனர். 

இதனால் திருப்பூர் பின்னாலடை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும், எடுத்த ஆர்டர்களுக்குத் தேவையான நூலைக் கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலையொட்டி 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பெண்ணிடம் 6 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT