திருப்பூர்

ரூ.35.35 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

DIN

 வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.35.35 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார நடைபெற்ற ஏலத்தில் வேடசந்தூா், இடையகோட்டை, பொருளூா், பல்லடம், எலவனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 60 விவசாயிகள் தங்களுடைய 943 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 46,393 கிலோ.

காரமடை, ஈரோடு, முத்தூா், நடுப்பாளையம், காங்கயத்தில் இருந்து 6 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை கிலோ ரூ.60.16 முதல் ரூ. 83.49 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 77.79.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 35.35 லட்சம்.

அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT