அவிநாசியில் ரூ.1.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் பல ஆண்டுகளாாக செயல்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.1.19 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, பணிகள் முடிவடைந்ததையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கானொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் பவுல்ராஜ், தியணைப்புத் துறை மாவட்ட அலுவலா் பூபதி, வட்டாட்சியா் ராஜேஷ், நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.