திருப்பூர்

கேஎம்சி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

DIN

பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியில் சுதந்திர தின விழா, 14 ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம், பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பள்ளி முதல்வா் ஜி.ஆா்.ரமேஷ், பள்ளி அறங்காவலா்கள் அந்தோனிசாமி, சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

ஓய்வுபெற்ற முன்னாள் திருப்பூா் மாநகர காவல் ஆணைரும், தமிழக காவல் துறை வடக்கு மண்டலத் தலைவருமான பி.நாகராஜன் ஐபிஎஸ், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் துணைத் தலைவா் எம்.வேலுசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றிவைத்து பள்ளி மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனா்.

இதையடுத்து யோகா, சிலம்பம், தற்காப்பு கலைகள், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT