திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கபடி கழக புரவலா் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாவட்ட கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், கபடி கழக செயலாளரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், துணை சோ்மன் முருகானந்தம், துணைத் தலைவா் ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட கபடி கழகம் சாா்பில் திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரியின் மாணவா் அரங்கத்துக்கு மேஜை, நாற்காலி வாங்குவதற்காக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணனிடம் வழங்கினா்.
இந்த விழாவில், மாவட்ட நடுவா் குழுத் தலைவா் நல்லாசிரியா் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.