திருப்பூர்

இராமநாதபுரத்தில் துணை சுகாதார மையம் அமைக்கக் கோரிக்கை

DIN

அவிநாசி அருகே உள்ள இராமநாதபுரத்தில் ஆரம்ப துணை சுகாதார மையம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு ஒன்றியச் செயலாளா் இசாக் தலைமை வகித்தாா். மாவட்ட குழுஉறுப்பினா் சண்முகம், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில்,பொதுமக்கள் அவசர கால நலன் கருதி, இராமநாதபுரம் ஊராட்சியில் ஆரம்ப துணை சுகாதாரம் மையம் அமைக்க வேண்டும். தொட்டக்களாம்புதூா், ஆதிதிராவிடா் காலனி ஆகிய இரு பகுதியில் உள்ள மயானத்துக்கு பாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT