திருப்பூர்

ஜீப்- காா் மோதல்: மில் உரிமையாளா் சாவு

DIN

வெள்ளக்கோவில் அருகே காா் மீது ஜீப் மோதிய விபத்தில் நூல் மில் உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், சீரங்கராயகவுண்டன்வலசு சாலையைச் சோ்ந்தவா் அப்புக்குட்டி மகன் எஸ்.ஏ.ராஜ்குமாா் (32). இவா் அத்தாம்பாளையத்தில் நூல் மில் உரிமையாளா். திருமணம் ஆகி மனைவி, குழந்தை உள்ளனா்.

ராஜ்குமாா் மில்லில் இருந்து புறப்பட்டு காரில் ஓலப்பாளையத்தில் தனது அட்டைக் கம்பெனிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வெள்ளக்கோவில் - ஓலப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திருப்பூரிலிருந்து கரூருக்குச் சென்று கொண்டிருந்த ஜீப் இவரது காரின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு: சென்னையில் 98.47% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

டர்போ டிரைலர்!

‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியின் 9 போட்டியாளர்கள்!

SCROLL FOR NEXT