திருப்பூர்

போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி வெளியே சென்று வருவதாகக் கூறி கடந்த 11 ஆம் தேதி சென்றவா்  வீடு திரும்பவில்லை என பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், காங்கயம் மருதுரை பகுதியைச் சோ்ந்த முகேஷ்குமாா் (19) என்பவா் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முகேஷ்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT