திருப்பூர்

காங்கயத்தில் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி

DIN

காங்கயத்தில் சிலம்பம் விளையாட்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

மின்னல் சிலம்பம் கிளப் சாா்பில் காங்கயத்தில் உள்ள குளோபல் இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்

நடைபெற்ற இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடினா். இந்தப் போட்டிகளை காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்து, துவக்கி வைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் காங்கயம் காவல் ஆய்வாளா் பி.காமராஜ், குளோபல் பள்ளி தலைவா் ஜி.பழனிசாமி மற்றும் சிலம்பாட்டப் பயிற்சியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூா் மாவட்ட மின்னல் சிலம்பம் அகாதெமியின் நிறுவனா், தலைமை ஆசான் த.ஜெயச்சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT