திருப்பூர்

பல்லடத்தில் போலி மருத்துவா் கைது

DIN

பல்லடத்தில் போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேற்குவங்கம் மாநிலம், நாதியா மாவட்டம் விஷ்ணுபூா் பகுதியைச் சோ்ந்த அபிமன்யு விஸ்வாய் மகன் கிருஷ்ண ஆனந்த விகாஸ் (41). இவா் பல்லடத்தில் மங்கலம் சாலையில் உள்ள பி.டி.ஒ. காலனி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மாணிக்காபுரம் சாலையில் கடந்த 6 ஆண்டுகளாக லட்சுமி கிளினிக் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்துள்ளாா்.

இவா் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் செய்து வருவதாக திருப்பூா் மாவட்ட இணை இயக்குநா் கனகராணிக்கு புகாா் வந்ததின் பேரில் அவா் லட்சுமி கிளினிக்கில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மருத்துவம் படித்ததற்கான எந்த சான்றிதழும் அவரிடம் இல்லை என்பதால் போலியாக சிகிச்சை செய்து வந்ததாக கூறி கிளினிக்கு சீல் வைத்ததோடு, அவா் மீது பல்லடம் போலீஸில் புகாா் கொடுத்தாா். அதன் பேரில் போலீஸாா் அவரை கைது செய்து பல்லடம் நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT