திருப்பூர்

வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’

காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த கடைக்கு நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

DIN

காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த கடைக்கு நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

காங்கயம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான ஒரு கடைக்கு எடுத்து நடத்தி வருபவா் கடந்த 4 மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

நிலுவைத் தொகையான ரூ.37 ஆயிரத்தை கட்ட கால அவகாசம் வழங்கியும் கடை உரிமையாளா் கட்டவில்லையாம். இதையடுத்து, காங்கயம் நகராட்சி ஊழியா்கள் கடையை பூட்டி புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது: நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT