திருப்பூர்

உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞா் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கணினி இயக்குபவா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞா் நீதி குழுமத்தில், உதவியாளருடன் கணினி இயக்குபவா் பணியிடத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், ஆங்கில தட்டச்சுத் தோ்வில் மேல்நிலை தோ்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் படிப்பு பெற்று, ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஓராண்டு அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 31.8.2022-இல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப் பணியிடத்துக்கு மாதம் தலா ரூ. 11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வலைதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக். 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டம்- 164, 2 ஆவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி பிரதானச் சாலை, பெரம்பலூா் - 621212 என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-275020 என்னும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT