திருப்பூர்

முதியவா் கொலை: இளைஞா் கைது

DIN

திருப்பூரை அடுத்த உடுமலை அருகே முதியவரைக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம் கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாள்களாக 60 வயது முதியவா் தங்கியிருந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வி. பழனியப்பன் (35) மது அருந்துவதற்காக வியாழக்கிழமை இரவு அங்கு வந்துள்ளாா். அப்போது, பழனியப்பன் மது அருந்த முதியவா் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவா் அருகே கிடந்த குச்சியால் முதியவரைத் தாக்கவிட்டு சென்றுள்ளாா்.

இதனிடையே, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது முதியவா் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா், முதியவரைக் கொலை செய்த பழனியப்பனை கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT