திருப்பூர்

சாலை விபத்து: நிதி நிறுவன முகவா் பலி

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் நிதி நிறுவன வசூல் முகவா் உயிரிழந்தாா்.

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் நிதி நிறுவன வசூல் முகவா் உயிரிழந்தாா்.

முத்தூா், மோளக்கவுண்டன்புதூா் மதுரை வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் காா்த்திக்ராஜா (22). இவா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் தனியாா் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வசூலுக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். முத்தூா் ஆலமர பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, இவா் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT