திருப்பூரில் அரசு கல்லூரி மாணவா்கள் சாா்பில் ரமலான் வாழ்த்துச் சொல்லி மஞ்சப்பை தொடா்பான விழிப்புணா்வு சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 ஆகியன சாா்பில் திருப்பூா் பெரிய பள்ளி வாசலில் இஸ்லாமியா்களுக்கு ரமலான் வாழ்த்துச் சொல்லி மஞ்சப்பை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், பெரிய பள்ளிவாசலின் தலைவா் ஷாஜகான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பொது மக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும் நெகழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.