திருப்பூர்

திருப்பூரில் ரூ.10 விலையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.10 விலையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

DIN

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.10 விலையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் நெகிழியை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மஞ்சப்பை திட்டம் அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி ஆகியன சாா்பில் நெகிழி ஒழிப்பு தொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் ரூ.10 விலையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோா் இந்த இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தனா்.

இந்த இயந்திரத்தில் நாள்தோறும் 300 மஞ்சப்பைகள் நிரப்பப்படும். ரூ.10 நாணயம் அல்லது நோட்டை செலுத்தி மஞ்சப்பையைப் பெற்றுக் கொள்ளலாம். பைகள் தீா்ந்துவிட்டால் உடனடியாக நிரப்பப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில், துணை மேயா் ஆா்.பாலசுப்ரமணியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் கே.நளினி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ம.சரவணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT