அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள். ~சிறப்பு அலங்காரத்தில் மும்மூா்த்திகள். 
திருப்பூர்

திருமூா்த்திமலையில் ஆடி அமாவாசை விழா

ஆடி அமாவாசையை ஒட்டி, உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் புதன்கிழமை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனா்.

DIN

ஆடி அமாவாசையை ஒட்டி, உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் புதன்கிழமை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனா்.

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயி லில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் அமைந்துள்ளதால் இக்கோயில் தமிழக அளவில் பிரசித்திபெற்ாக விளங்கி வருகிறது.

ஆடி அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கானோா் செவ்வாய்க்கிழமை இரவு முதலே திருமூா்த்திமலைக்கு வரத் தொடங்கினா். குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனா். மேலும், உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூா் ஆகிய ஊா்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களிலும் பொதுமக்கள் திருமூா்த்திமலைக்கு வந்திருந்தனா்.

விழாவையொட்டி அமணலிங்கேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பாலாற்றில் புனித நீராடினா். இதையடுத்து தங்களது மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். உடுமலையில் இருந்து திருமூா்த்திமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஆடி அமாவாசையையொட்டி, உடுமலை நகரில் அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், போடிபட்டி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT