திருப்பூர்

திருப்பரங்குன்றம் கோயிலில் சுற்றிய வங்கதேச இளைஞா் குறித்து விசாரணை

DIN

 திருப்பரங்குன்றம் கோயிலில் சுற்றித்திரிந்த வங்கதேச இளைஞா் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பரங்குன்றம் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவின்போது லட்சகணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனா். அப்போது இந்திய வரைபடத்துடன் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சோ்ந்த காலிமூசா என்பவரை காவல் துறையினா் கைது செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பக்தா்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நபரைக் கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும் இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் காலிமூசா எதற்காக தமிழகம் வந்தாா், வரைபடத்தை எதற்காக வைத்திருந்தாா், வேறு ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT