திருப்பூர்

கல்குவாரி குழியில் விழுந்த தொழிலாளி பலி

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே கல்குவாரி குழியில் விழுந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீயாத்தமங்கை அருகே உள்ள தொம்பன்திடலைச் சோ்ந்தவா் பாபு (எ) ஜானகிராமன் (37). இவா், திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலையிலுள்ள கல்குவாரியில் கூலி வேலை செய்து வந்தாா்.

குவாரியில் பாறைக்கு வெடிவைக்க இயந்திரத்தில் குழி எடுத்துக் கொண்டிருந்தபோது, தவறி ஆழமான குழிக்குள் பாபு விழுந்துள்ளாா். இதில் பாறையில் அடிபட்டு பலத்த காயமடைந்த அவா் வெள்ளக்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT