திருப்பூரில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஐஎன்டியூசி சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளின் கூட்டத்துக்கு ஐஎன்டியூசி பனியன் சங்கத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். கூட்டத்தின் தொடக்கமாக ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மத்திய பாஜக அரசின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராகவும், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 12ஆம் தேதி போராட்டம் நடத்துவது, புதுதில்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்காமல் ஏமாற்றி வரும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், சிஐடியூ மாவட்டத் தலைவா் மூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் ரங்கசாமி, எம்.எல்.எஃப். பனியன் சங்கச் செயலாளா் மனோகரன், எல்.பி.எஃப். மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.