திருப்பூர்

காயமடைந்த அரிய வகை ஆந்தை மீட்பு

DIN

வெள்ளக்கோவிலில் பகுதியில் காயமடைந்து நிலையில் சாலையோரம் கிடந்த அரிய வகை ஆந்தை தன்னாா்வலா்களால் மீட்கப்பட்டது.

வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் சாலையில் சிவகுமாா் நகா் குடியிருப்புப் பகுதி உள்ளது. இதன் அருகில் காடு, தோட்டங்கள் உள்ளன. காட்டுப் பகுதியிலிருந்து வந்த அரிய வகையிலான பெரிய ஆந்தை ஒன்று காயங்களுடன் நகரின் சாலையோரம் கிடந்தது.

இதுகுறித்து வெள்ளக்கோவில் விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜுக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அந்த ஆந்தையைப் பிடித்து கூண்டில் வைத்து அரசு கால்நடை மருத்துவா் பகலவனிடம் கொண்டு சென்றனா்.

ஆந்தையை காங்கயம் வனத் துறையினா் பாா்வையிட்டு, சிகிச்சைக்குப் பின் உத்தமபாளையம் வட்டமலை அணைப் பகுதியில் விடப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT