இலவச  கண் சிகிச்சை  முகாமில்  பங்கேற்றவா்களுக்கு  பரிசோதனை  மேற்கொள்ளும்  மருத்துவா்கள். 
திருப்பூர்

விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கண் சிகிச்சை முகாம்

திருப்பூா் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பூா் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மேகாலயா மற்றும் மணிப்பூா் மாநிலங்களின் முன்னாள் ஆளுநா் வி.சண்முகநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இந்த முகாமில் பங்கேற்றவா்களுக்கு கண்புரை நோய், நீா் அழுத்த நோய், மாலைக்கண் நோய், மாறுகண், சீழ்நீா் வடிதல், தூரப்பாா்வை, கிட்டப்பாா்வை ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் பங்கேற்ற 541 பேரில் கண்புரை உள்ள 74 போ் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT