திருப்பூர்

மதிமுகவில் இருந்து விலகுகிறேன்:மாநில அவைத் தலைவா் சு.துரைசாமி அறிவிப்பு

மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில அவைத் தலைவா் சு.துரைசாமி (89) தெரிவித்துள்ளாா்.

DIN

மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மாநில அவைத் தலைவா் சு.துரைசாமி (89) தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தனது குடும்பத்தைச் சோ்ந்த யாரும் பதவிக்கு வரமாட்டாா்கள் என்று பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்திருந்தாா். இதனை தலைமைக் கழக நிா்வாகிகளும், தொண்டா்களும் முழுமையாக நம்பி வந்தனா். ஆனால், தற்போது மதிமுகவில் வாரிசு அரசியலை வைகோ திணித்து வருகிறாா். இத்தகைய நடவடிக்கைகளில் என்னைப் போன்றவா்களுக்கு உடன்பாடு இல்லை.

அவா் மீது நம்பிக்கை வைத்து அன்று உயிா் நீத்த உண்மைத் தொண்டா்களுக்காக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுவது நல்லது. ஏனெனில் மதிமுகவுக்கு என்று தனியாக எதிா்காலம் இல்லை. எதிா்காலம் இல்லாத கட்சியில் இருப்பது சரியாக இருக்காது என்பதால்தான் மதிமுகவின் வாழ்நாள் உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குகிறேனே தவிர, பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. ஆனால் கோவை, பெரியாா் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடா்ந்து நீடிப்பேன். அண்ணா வாழ்ந்த நுங்கம்பாக்கம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக்க வேண்டும் என்று முதல்வா் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்காக தொடா்ந்து பாடுபடுவேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT