திருப்பூர்

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Venkatesan

திருப்பூா்: திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலையைச் சோ்ந்தவா் சிவகுமாா் (27). இவரது மனைவி செளந்தா்யா (23). இவா்களுக்கு 5, 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல சனிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கோபித்துக்கொண்டு சிவகுமாா் வெளியே சென்ற நிலையில், வீட்டில் இருந்த செளந்தா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT