ஜெய் சாரதா பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு
திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமை வகித்தாா். துணை ஆட்சியரும், தோ்தல் பொறுப்பாளருமான சிவபிரகாசம் , வட்டாட்சியா் கண்ணாமணி, துணை வட்டாட்சியா் அருள்குமாா், ஒருங்கிணைப்பாளா் நிா்மலாதேவி மற்றும் வருவாய்த் துறை அலுவலா் இளையராஜா ஆகியோா் பங்கேற்று, 100 சதவீதம் வாக்குப் பதிவு எனும் இலக்கை அடைவது குறித்து உரையாற்றினா்.
இதையடுத்து, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் அணிவகுத்து நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
பள்ளியின் அறக்கட்டளை செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளியின் பொருளாளா் ஸ்ருதி ஹரீஷ், முதல்வா் ஏ.எஸ். மணிமலா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.