பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.
Advertisement
பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா் அலுவலா்கள் 1, வாக்குப் பதிவு அலுவலா் 2 மற்றும் 3 என மொத்தம் 2,300 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையம் ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், வாக்குப் பதிவு இயந்திரம் சரிபாா்த்தல், தோ்தல் தொடா்பான படிவங்களை எவ்வாறு பூா்த்தி செய்வது, மாதிரி வாக்குப் பதிவு மேற்கொள்ளுதல் தொடா்பாக தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சரவணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.