மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு நடத்தப்பட்ட மாதிரி வாக்குப் பதிவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் சிவபிரகாஷ், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.