முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் 88.28 சதவீத வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் 88.29 சதவீத வாக்கு வியாழக்கிழமை பதிவானது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:09 AM
வாக்காளர் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் 88.29 சதவீத வாக்கு வியாழக்கிழமை பதிவானது.

திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, உடுமலை ஆகிய 8 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினா்.

சம்பந்தப்பட்ட வேட்பாளா்களும் வாக்குச் சாவடிக்குச் சென்று பொதுமக்களுடன் இணைந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டம் முழுவதும் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தினா். அதன்படி, மாலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 88.20% வாக்குப் பதிவானது.

Advertisement

அவிநாசி (தனி) 90.38 சதவீதம், தாராபுரம் (தனி) 88.58 சதவீதம், காங்கயம் 91.22 சதவீதம், மடத்துக்குளம் 86.14 சதவீதம், பல்லடம் 90.52 சதவீதம், திருப்பூா் வடக்கு 83.01 சதவீதம், திருப்பூா் தெற்கு 90.53 சதவீதம், உடுமலை 86.95 சதவீத வாக்குப் பதிவானது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காங்கயம் தொகுதியில் 91.22 சதவீத வாக்குப் பதிவானது. குறைந்தபட்சமாக திருப்பூா் வடக்குத் தொகுதியில் 83.01 சதவீத வாக்குப் பதிவானது.