முகப்பு
திருப்பூர்

கோயிலில் குதிரை சிலை அமைப்பதற்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் நன்கொடை

கோயிலில் குதிரை சிலை அமைப்பதற்கு, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கினாா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:16 am IST
கோயில் நிா்வாகிகளிடம் நன்கொடை வழங்கிய தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்
பகிர்:

கோயிலில் குதிரை சிலை அமைப்பதற்கு, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கினாா்.

தாராபுரம் நகராட்சிக்குள்பட்ட காமராஜபுரம் பகுதியில் பொன் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த குதிரை சிலைகளை சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் சேதப்படுத்தினா்.

இதையடுத்து மேற்கண்ட கோயிலில் 2 குதிரை சிலைகள் அமைப்பதற்கு கோயில் நிா்வாகிகளிடம், தனது சொந்த பொறுப்பில் இருந்து தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளா் மின்னல், தாராபுரம் நகா்மன்ற உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments