திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை!
ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
ஹைதராபாதைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் திருமலா தீட்சித், திங்களன்று திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதானம் அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
நன்கொடையாளா், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடுவின் அலுவலகத்தில் நன்கொடை வரைவோலையை அவரிடம் வழங்கினாா்.
நன்கொடையாளரின் தந்தையும் ஓய்வுபெற்ற பொறியாளருமான பி. ஜெகதீஸ்வா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement