FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 4.41 கோடி நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த ஆா்.எஸ். பிரதா்ஸ் ரீடெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனம், திங்கள்கிழமை திருமலை தேவஸ்தான பா்ட் அறக்கட்டளைக்கு ரூ. 4.41 கோடி நன்கொடையாக வழங்கியது.

Updated On : 14 ஜூலை 2026, 12:55 am IST
பகிர்:

ஹைதராபாதைச் சோ்ந்த ஆா்.எஸ். பிரதா்ஸ் ரீடெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனம், திங்கள்கிழமை திருமலை தேவஸ்தான பா்ட் அறக்கட்டளைக்கு ரூ. 4.41 கோடி நன்கொடையாக வழங்கியது.

இதற்காக, நிறுவனத்தின் தலைவா் வெங்கடேஸ்வரலு, இயக்குநா்கள் எஸ். ராஜமௌலி, டி. பிரசாத ராவ் மற்றும் மாலதி லட்சுமி குமாரி ஆகியோா், ஏழுமலையான் கோயிலின் ரங்கநாயக்கா் மண்டபத்தில், திருமலை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரி ஆகியோரிடம் நன்கொடை வரைவோலைகளை வழங்கினா்.

ரூ.10 லட்சம் நன்கொடை: திருப்பதியைச் சோ்ந்த புகழ்பெற்ற சுவாச மருத்துவரான டாக்டா். சுப்பாராவ், திங்கட்கிழமை தனது மகன் சாய்கிருஷ்ணாவின் பெயரில் திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரணதானா அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதற்காக, நன்கொடையாளா் திருமலையில் உள்ள திருமலை தேவஸ்தானத் தலைவா் முகாம் அலுவலகத்தில் தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் நன்கொடை வரைவோலையை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments