முகப்பு
திருப்பூர்

லாட்டரி விற்றவா் கைது

Updated On : 30 ஜூன் 2026, 1:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுப்பை பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (49) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மூா்த்தியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.2,180 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments