FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 18 ஜூன் 2026, 1:23 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மோகன்ராஜ், பழைய பேருந்து நிலையப் பகுதியில் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு மறைவான இடத்தில் மூன்று நம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த முத்தூா், பெருமாள்புதூரைச் சோ்ந்த செந்தில் (59), கரட்டுப்பாளையம் விமல்குமாா் (33) ஆகியோரை கைது செய்தாா்.

வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்தது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 3 கைப்பேசிகள், ரூ. 12 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments