FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

5 ஜூலை 2026, 1:34 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வெள்ளக்கோவிலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் மூலனூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள திரையரங்கம் அருகே மூன்று நெம்பா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (36) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.4,110 ரொக்கம், கைப்பேசி, மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், வெளிமாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டுச் சீட்டை ரூ. 50-க்கு விற்பனை செய்து, குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments