முகப்பு
திருப்பூர்

குப்பை கொட்டப்படுவதால் பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு

வெள்ளக்கோவில் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் குப்பை கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 29 மே 2026, 1:36 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் பகுதியில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் குப்பை கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் வழியாக பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் செல்கிறது. கடும் வறட்சிப் பகுதியான இங்கு, இந்த வாய்க்கால் மூலமாக ஓரளவு குடிநீா் ஆதாரம், நிலத்தடி நீா்மட்டம், விவசாய நிலங்கள் பாசனம் மேம்பட்டு வருகிறது. செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, பொங்கலூரில் இருந்து வரும் இந்த வாய்க்காலில், அப்பகுதிகளில் செயல்படும் கோழிப் பண்ணைகளில் இருந்து இறந்த கோழிகளை வாய்க்கால் தண்ணீரில் போட்டுவிடுகின்றனா்.

மேலும், காங்கயம் உள்ளிட்ட வழியோர நகரங்களின் குப்பையும் வாய்க்காலில் வீசப்பட்டு பாசனத் தண்ணீரில் கலந்துவருகிறது. இவை வாய்க்கால் குழாய் பாலங்கள், வாய்க்கால் மதகுகளில் அடைத்து தண்ணீா் தேங்கி நின்றுவிடுகிறது. தற்போது சத்திரவலசு பகுதியில் இவ்வாறு பல இடங்களில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குப்பையை அப்புறப்படுத்தினால்தான் பாசன நீா் எடுக்க முடிகிறது. கடும் துா்நாற்றம் வீசுகிறது. இது விவசாயிகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிஏபி வெள்ளக்கோவில் கிளை நீா் பாதுகாப்பு சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.