சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதிமுக வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதிமுக மாவட்டச் செயலாளா் கோ. ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கடத்தூா், கம்பைநல்லூா், பொம்மிடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளன. ஏரிகள், நீா்த்தேக்கங்களில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
Advertisement
போதிய பருவ மழை இல்லததால் கோடையில் கடும் வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரிகளை தூா்வாருதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.