பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்து நிற்கும் கருவேல மரங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீ வின் நிலப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் சாலைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டிலும், பரமரிப்பிலும் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் முறையாகப் பராமரிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாம்பன் சாலைப் பாலத்தின் இரு புறங்களில் வளா்ந்துள்ள காட்டு கருவேல மரங்களால் பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது. எனவே, இந்தப் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement