தருமபுரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் (பொ) டி.பி.பைரேஸ் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் எம்.எஸ்.அலாவுதின், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி.சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் ஏ.குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர்கள் ஜானகிராமன், த.ஜெயந்தி உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், மசூதியை இடித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இடப் பிரச்னையில் ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.