தருமபுரி

பெண்களை கிண்டல் செய்து பேனர் வைத்த 9 பேர் கைது

தினமணி

அரூரை அருகே பெண்களை கேலி, கிண்டல் செய்து விளம்பர பேனர் வைத்ததாக 9 பேரை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
 அரூர் வட்டம், கீரைப்பட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு, இளைஞர்கள் சிலர் திருவிழா வரவேற்பு பேனர் வைத்துள்ளனர். அதில், பெண்களை கேலி,
 கிண்டல் செய்யும் வகையில் விளம்பர பேனரில் வாசகம் எழுதப்பட்டிருந்ததாம். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கீரைப்பட்டியைச் சேர்ந்த பீமன் மகன்கள்
 அறிவழகன் (22), தினேஷ் (20), சர்தார் மகன்கள் சையத் ஆசிக்சையத் (19), இஸ்மாயில் (21), பாஷா மகன் பரூக் (10), சேகர் மகன் ரஞ்சித் (19), புகழேந்தி மகன் பிரதீப் (20), சீனிவாசன் மகன் ஜெய் (18), குமார் மகன் பவித்ரன் (20) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மணி (எ) பல்சர் மணி, சென்னப்பன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT