அரசு மற்றும் தனியார் கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி அரசு கல்லூரி மாணவர்கள் 100 பேர், ஜெயம் கல்லூரி மாணவர்கள் 30 பேர் உள்பட மொத்தம் 130 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.
தருமபுரி அருகேயுள்ள மூக்கனூர் மலையில் என்.சி.சி. அலுவலர்கள் முருகன், விஜயதேவன் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் சுமார் 1,200 மீட்டர் உயரமுள்ள மலையை ஏறி பயிற்சிப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மலையேற்ற பயிற்சியினால், மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.