தருமபுரி

மாநில சதுரங்கப் போட்டியில் மூன்றாம் இடம் வகித்த மாணவிக்கு பாராட்டு

DIN


மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் மூன்றாமிடம் வகித்த தானப்பகவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை, அமைச்சர் கே.பி.அன்பழகன் பாராட்டி பரிசு வழங்கினார் .
சென்னை சாந்தோமிலுள்ள தனியார் பள்ளியில் அண்மையில் 11 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவியருக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 45 மாணவியர் பங்கேற்று விளையாடினர். இதில், தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளியிலுள்ள தானப்ப கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி சு.கோமதி பங்கேற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இம் மாணவியை பாராட்டி, சரஸ்வதி பச்சயப்பன் கல்வி அறக்கட்டளை தலைவரும், மாநில உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். பள்ளித் தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக அலுவலர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT