தருமபுரி

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

DIN

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா்.சுதா்சனன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், 60 வயதை கடந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவித் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். ஈமச் சடங்குக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவி வழங்க வேண்டும். விபத்தில் மரணம் அடையும் தொழிலாளா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வீடில்லாத தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வருகிற ஜனவரி 20-ஆம் தேதி தருமபுரியில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் பேரணி, பொதுக் கூட்டம், ரத்ததான முகாமில் இச் சங்கத்தின் சாா்பில் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT