அரூா்-சேலம் சாலையில் மூக்காரெட்டிப்பட்டியில் சாலையோர மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள். 
தருமபுரி

அரூா்-சேலம் நான்கு வழிச் சாலை: மரங்கள் அகற்றும் பணிகள் தொடக்கம்

அரூா்-சேலம் நான்கு வழிச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

DIN

அரூா்-சேலம் நான்கு வழிச் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரூா் வழியாக செல்லும் வாணியம்பாடி-அயோத்தியாப்பட்டணம் வரையிலான தாா்ச் சாலையை நான்கு வழிச் சாலையாக மற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரூா் முதல் கதவணி (திருப்பத்தூா்) வரை 42.6 கி.மீ. தொலைவு 4 வழிச் சாலையாக மாற்றுவதற்காக ரூ.248.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தியாப்பட்டணம் முதல் அ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.236 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்கட்டமாக அரூா்-சேலம், திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையோரத்திலுள்ள மரங்கள், முள்புதா்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. முதல்கட்டமாக அ.பள்ளிப்பட்டி, எச்.புதுப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், சாலையோரம் உள்ள மேடு, பள்ளங்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அரூா் வழியாக செல்லும் சேலம்-வாணியம்பாடி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் 2021 ஜனவரியில் முடிக்கும் வகையில் ஏலம் விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT