தருமபுரி

ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

மொரப்பூர் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மொரப்பூர்-தொங்கனூர் ரயில்வே பாதையில், தாசரஹள்ளி எனுமிடத்தில் ரயில்வே சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதையை சிந்தல்பாடி, தாசரஹள்ளி, மொரப்பூர், வகுத்துப்பட்டி, தொங்கனூர் உள்பட 30 மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த ரயில்வே சுரங்கப் பாதையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், இந்த சாலை வழியாக கார், இருசக்கர வாகனங்கள், மினி சரக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள்ளது.
மேலும், ரயில்வே சுரங்கப்பாதை சேதமடைந்து இருப்பதால், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது. எனவே, மொரப்பூரை அடுத்த தாசரஹள்ளி அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாதையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய சூதாட்டத்துக்கு தடை பெறுவது அவசியம்: ராமதாஸ்

யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

பாஜக வென்றால் 22 கோடீஸ்வரா்களே நாட்டை ஆள்வா்- ஒடிஸாவில் ராகுல் பிரசாரம்

கடலோர வாழ்வாதார சங்கத்தை மூடக் கூடாது: அண்ணாமலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது: ‘நியூஸ்கிளிக்’ நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT