தருமபுரி

வள்ளிமதுரை நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞர் பலி

DIN

அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
 தருமபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாது மகன் சக்திவேல் (27). மளிகை கடை நடத்தி வந்தார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்து கொண்டிருந்தார். 
அப்போது, எதிர்பாரதவிதமாக சேற்றில் சிக்கியதில் சக்திவேல் நீரில் மூழ்கினார். இதையடுத்து,  தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சக்திவேலின் சடலத்தை மீட்டனர். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, 3 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT