தருமபுரி

அரூரில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

DIN


அரூரில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அரூர் தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும்
உள்ளன.
இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள், வாக்குப்பதிவுகள், தேர்தல் விதிமுறைகள் குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.புண்ணியக்கோட்டி வழங்கினார். இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT