பொம்மிடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பேரூராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட நகா் பகுதியில் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, செயல் அலுவலா் மா.விஜயன் தலைமையில், பேரூராட்சி பணியாளா்கள் பொம்மிடியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சுமாா் 50 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்களை பேரூராட்சி பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.